Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி,மார்ச்.25: காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று முன் தினம் வெளியிட்டது.இதில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறையில் நடைபெறவில்லை.
பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வாய்ப்பு இல்லை என்றும், அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை திரும்ப பெற வேண்டும்.கட்சிக்கு உழைத்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்து புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு உடலில் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உடனடியாக போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.